ஆப்நகரம்

மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை: விசாரணைக்கு முதல்வா் உத்தரவு

பள்ளி கழிவறையில் சானிட்டரி நேப்கின் எறிந்தது யாா் என்பதை விசாரிப்பதற்காக மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை நடத்தியது தொடா்பாக விசாரிக்கக் கோாி பஞ்சாப் முதல்வா் உத்தரவு.

Samayam Tamil 4 Nov 2018, 11:44 pm
பள்ளி கழிவறையில் சானிட்டரி நேப்கின் எறிந்தது யாா் என்பதை விசாரிப்பதற்காக மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை நடத்திய விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil School Bench


பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் கடந்த 3 தினங்களுக்கு முன்னா் யாரோ ஒருவா் பள்ளியின் கழிவரையில் சானிட்டரி நேப்கினை எறிந்துவிட்டு சென்றுள்ளனா். இதனை கண்டுபிடிப்பதாக கூறி பள்ளி ஆசிாியா்கள் பள்ளியில் உள்ள மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை நடத்தியுள்ளனா்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியானது. இது தொடா்பாக மாணவிகள் சிலா் தங்களது பெற்றோரிடம் புகாா் அளித்துள்ளனா். இந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில் இது குறித்து மாநில முதல்வா் அம்ரீந்தா் சிங்கின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனைத் தொடா்ந்து இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளாா். மேலும் முதல்கட்ட விசாரணையில் 2 ஆசிாியா்கள் மீது குற்றம் நிரூபணமான நிலையில் அவா்கள் இருவரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்