புனே: புனே, ஹதாப்சார் பகுதியில், சமூக வலைத்தளத்தில் சொந்த விவரங்களை பகிர்ந்ததால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சரி புத்ரக் பகுதியில் ஷிவ் பார்க் அடுக்குமாடியில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் மனைவி சோனாலி (28)-யை, கொலை செய்த ராகேஷ் கங்குர்தே(34), தானும் ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியிருந்த ராகேஷ், தங்களது குடும்ப வாழ்க்கை பற்றி சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் மனைவி சோனாலி பகிர்ந்துக் கொண்டது பிடிக்கவில்லை. பலமுறை கூறியும் திரும்ப திரும்ப இதனை செய்து வந்ததால் ஆத்திரமடைந்து மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் ஐடி ஊழியராக பணியாற்றி, கடந்த மாதம் பணியில் இருந்து விலகி சூரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு பணியாற்ற துவங்கியுள்ளார். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் சோனாலியின் அண்ணனுக்கு அவரது தாய் போன் செய்து சோனாலியை தொடர்புக் கொள்ள முடியவில்லை என்று தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த சோனாலியின் அண்ணன் ஹர்ஷால் பவர், இருவரையும் தொடர்புக் கொள்ள முயற்சித்துள்ளார். பதில் ஏதும் வராததையடுத்து, சோனாலியின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து ஜன்னல் வழியாக பவர் உள்ளே செல்ல முயன்றபோது அக்கம்பக்கத்தினர் அறிவுரையின்படி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் போலீசாரின் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையில் கிடந்த சோனாலியின் பிணத்தையும், ராகேஷ் தூக்கில் தொங்கியதையும் கண்டு பவர் அதிர்ச்சியைடந்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ராகேஷின் இறுதிக் கடிதத்தில், இந்தக் கொலைக்கும், தனது தற்கொலைக்கும் நான் தான் முழு பொறுப்பு என்று குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்தனர். இருவரது சடலத்தையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரது குடும்பத்தினரிடமும் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக சோனாலியின் வீட்டார் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்று ஹதாப்சர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
A software professional allegedly murdered his wife and then hanged himself from the ceiling fan at their rented accommodation at Shiv Park Apartments in Manjri Budruk near Hadapsar, around 12km from here, late on Tuesday night.
மஞ்சரி புத்ரக் பகுதியில் ஷிவ் பார்க் அடுக்குமாடியில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் மனைவி சோனாலி (28)-யை, கொலை செய்த ராகேஷ் கங்குர்தே(34), தானும் ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியிருந்த ராகேஷ், தங்களது குடும்ப வாழ்க்கை பற்றி சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் மனைவி சோனாலி பகிர்ந்துக் கொண்டது பிடிக்கவில்லை. பலமுறை கூறியும் திரும்ப திரும்ப இதனை செய்து வந்ததால் ஆத்திரமடைந்து மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் ஐடி ஊழியராக பணியாற்றி, கடந்த மாதம் பணியில் இருந்து விலகி சூரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு பணியாற்ற துவங்கியுள்ளார். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் சோனாலியின் அண்ணனுக்கு அவரது தாய் போன் செய்து சோனாலியை தொடர்புக் கொள்ள முடியவில்லை என்று தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த சோனாலியின் அண்ணன் ஹர்ஷால் பவர், இருவரையும் தொடர்புக் கொள்ள முயற்சித்துள்ளார். பதில் ஏதும் வராததையடுத்து, சோனாலியின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து ஜன்னல் வழியாக பவர் உள்ளே செல்ல முயன்றபோது அக்கம்பக்கத்தினர் அறிவுரையின்படி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் போலீசாரின் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையில் கிடந்த சோனாலியின் பிணத்தையும், ராகேஷ் தூக்கில் தொங்கியதையும் கண்டு பவர் அதிர்ச்சியைடந்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ராகேஷின் இறுதிக் கடிதத்தில், இந்தக் கொலைக்கும், தனது தற்கொலைக்கும் நான் தான் முழு பொறுப்பு என்று குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்தனர். இருவரது சடலத்தையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரது குடும்பத்தினரிடமும் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக சோனாலியின் வீட்டார் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்று ஹதாப்சர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
A software professional allegedly murdered his wife and then hanged himself from the ceiling fan at their rented accommodation at Shiv Park Apartments in Manjri Budruk near Hadapsar, around 12km from here, late on Tuesday night.