தெலுங்கானா மாநிலத்தில் சாலையில் உள்ள குழிகளை தானாகவே நிரப்பும் பணியைச் செய்த பள்ளிச்சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹப்சிகுடா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ரவிதேஜா. இவர் வீட்டிற்கு அருகேயே உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். இதனால், தினமும் நடத்தே பள்ளிக்குச் செல்வார்.
பள்ளிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாகக் கிடப்பதைப் பார்த்த ரவிதேஜா அவற்றைக் கற்களையும் திடக்கழிவுகளையும் போட்டு நிரப்பத் தொடங்கினார். தினமும் பள்ளி முடிந்து வந்ததும் இவ்வாறு சாலையை சரிசெய்யும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார்.
சிறுவன் ரவிதேஜாவின் இந்த செயல் மாநிலம் முழுவதும் பரவி பாராட்டைக் குவித்துக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளத்திலும் ரவிதேஜாவின் படம் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹப்சிகுடா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ரவிதேஜா. இவர் வீட்டிற்கு அருகேயே உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். இதனால், தினமும் நடத்தே பள்ளிக்குச் செல்வார்.
பள்ளிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாகக் கிடப்பதைப் பார்த்த ரவிதேஜா அவற்றைக் கற்களையும் திடக்கழிவுகளையும் போட்டு நிரப்பத் தொடங்கினார். தினமும் பள்ளி முடிந்து வந்ததும் இவ்வாறு சாலையை சரிசெய்யும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார்.
சிறுவன் ரவிதேஜாவின் இந்த செயல் மாநிலம் முழுவதும் பரவி பாராட்டைக் குவித்துக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளத்திலும் ரவிதேஜாவின் படம் வைரலாகி வருகிறது.