ஆப்நகரம்

காதல் தொல்லையால் 17 வயது சிறுமி தூக்கு மாட்டி தற்கொலை..!

இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததால்,மனமுடைந்த சிறுமி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

TNN 3 Nov 2016, 11:52 am
இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததால்,மனமுடைந்த சிறுமி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Samayam Tamil telangana 17 year old girl hangs herself after being stalked two youngsters arrested
காதல் தொல்லையால் 17 வயது சிறுமி தூக்கு மாட்டி தற்கொலை..!


தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஷிவரதி ஷிவானி என்ற 17 வயது சிறுமி,அருகிலுள்ள கமலாபூர் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன்னர் தன்னை ஸ்ரீகாந்த் என்ற இளைஞனும்,அவனுடைய நண்பனும் பின் தொடர்வதாகவும்,தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தனது பெற்றோரிடம் ஷிவானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஷிவானியை பின் தொடர்ந்த ஸ்ரீகாந்த்,தன்னை காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவதாக ஷிவானியை மிரட்டியுள்ளான்.இதனால் மனமுடைந்த ஷிவானி,வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் மற்றும் அவனது நண்பனை கைது செய்துள்ள காவல்துறையினர்,இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Telangana 17 year old girl hangs herself after being stalked, two youngsters arrested

அடுத்த செய்தி