ஆப்நகரம்

குற்றவாளிகளின் குடும்பங்களை தத்தெடுத்த காவல்துறையினர்!

ஹைதரபாத் நகர போலீசார், 72 சிறைக் கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Jun 2018, 10:12 am
ஹைதரபாத் நகர போலீசார், 72 சிறைக் கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil cats
குற்றவாளிகளின் குடும்பங்களை தத்தெடுத்த காவல்துறையினர்!


பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் குடும்பங்களுக்கு ஹைதராபாத் நகர காவல்துறையினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பலரின் குடும்பத்தினர் படிப்பறிவில்லாமல் ஏழ்மையிலும், வறுமையிலும் வாடுகின்றனர். மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இத்தகைய குடும்பங்களுக்கு சமூகத்தில் யாரும் ஆதரவு அளிப்பதில்லை.

இந்த நிலையில் தெலுங்கான மாநில காவல்துறையினர் சிறைக் கைதிகளின் குடும்பத்தினரை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முயற்சி செய்துள்ளனர்.

மேலும் சிறைவாசிகளின் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் முதியவர்களுக்கு உடல் நல சிகிச்சையளிக்கவும் மன ரீதியான பாதிப்புகளைக் களைந்து ஆலோசனைகள் வழங்கவும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலுங்கான மாநில காவல்துறையினரின் இந்த மனிதாபிமானமிக்க செயலுக்கு அனைத்து தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஹைதரபாத் நகர போலீசார், 72 சிறைக் கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி