ஆப்நகரம்

கடத்தல், கொள்ளையில் ஈடுபட்ட போலீசார்; மக்களை இனி யார் தான் காப்பாற்றுவார்கள்!

இளைஞரைக் கடத்தி, பணம் பறித்த போலீசாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TNN 25 Oct 2017, 2:55 pm
காசர்கோடு: இளைஞரைக் கடத்தி, பணம் பறித்த போலீசாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil telangana police robbed a man at gunpoint
கடத்தல், கொள்ளையில் ஈடுபட்ட போலீசார்; மக்களை இனி யார் தான் காப்பாற்றுவார்கள்!


தெலங்கானா மாநிலம் ஷிரபகிலு மஞ்சட்டட்கா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரெஹ்மான்(45). இவர் குற்றவியல் நீதிமன்றத்தில் தெலங்கானா போலீசார் மீது புகார் தெரிவித்துள்ளார். இதில் மோனிபெட் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள், நவாப்பேட் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் 4 கான்ஸ்டபிள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 20ஆம் தேதி, வித்யா நகரில் தவறான புகாரின் பேரில் டவீரா காரில் தன்னை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். மேலும் காரில் பயணித்த போது, தன்னிடமிருந்த ஆடம்பர ரேடோ வாட்ச், மொபைல் போன், ரூ.14,000 ரொக்கம் ஆகியவற்றை துப்பாக்கியை காட்டி பறித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

பின்னர் மொஹின்பெட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தவறான வார்த்தைகளால் திட்டியதாக கூறினார். இதுதொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Telangana Police robbed a man at gunpoint.

அடுத்த செய்தி