ஆப்நகரம்

கிரிக்கெட் போட்டியால் மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த இளைஞன்

போலீஸ் சோதனை நடத்தி, தன்னை பிடிக்க வந்துவிட்டனரோ என்ற பத்தில் 4வது மாடியிலிருந்து குதித்த 26 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

TOI Contributor 24 Apr 2017, 5:43 pm
வதோரா : போலீஸ் சோதனை நடத்தி, தன்னை பிடிக்க வந்துவிட்டனரோ என்ற பத்தில் 4வது மாடியிலிருந்து குதித்த 26 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Samayam Tamil terrified by police raid man jumps off terrace and dies
கிரிக்கெட் போட்டியால் மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த இளைஞன்


குஜராத், கலாலியின், ராமாநகரைச் சேர்ந்தவர் மகேஷ் சோலாங்கி. இவர் ஐபிஎல் போட்டிக்கான தன் வீட்டின் மொட்டை மாடியில் சில நபர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடி வந்தார். இந்த தகவலை அறிந்த போலீஸார் சூதாட்டம் நடக்கும் இடத்தை தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று குஜராத் - பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் 10வது சீசனின் 26வது போட்டி ராஜ்கோட்டில் நடைப்பெற்றது. சொந்த ஊர் போட்டி என்பதால் சூதாட்டம் சூடு பிடித்திருந்தது.

அப்போது, அங்கு போலீஸார் சூதாடுபவர்களை பிடிக்க வருவதாக தகவல் கிடைத்தது. அதோடு மாடியில் இருந்ததால், போலீஸார் வருவதைப் பார்த்த சோலாங்கி, பயத்தில் தான் நின்றிருந்த 4வது மாடியிலிருந்து தப்பிக்க அங்கிருந்து குதித்துள்ளார். அதில் படுகாயமடைந்த சோலாங்கி தன் உயிரை இழந்தார்.

இந்த தேடுதல் வேட்டையில், சூதாடியவர்களிடமிருந்து, ரூ.41,920 கைப்பற்றினர்.

அடுத்த செய்தி