தஞ்சை: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் சுப்ரமணியன்(50). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியை(17), தொடர்ந்து பாலியன் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் தாய், கடந்த 2017ல் பட்டுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுப்ரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் குற்றவாளிக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனையும் விதித்தார்.
மேலும் சாகும் வரை சுப்ரமணியன் சிறையில் தான் இருக்க வேண்டும் என்றும், இறந்த பின் சடலமாகத் தான் வெளியே வர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Thanjai Court orders 4 life sentence in minor rape case.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் சுப்ரமணியன்(50). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியை(17), தொடர்ந்து பாலியன் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் தாய், கடந்த 2017ல் பட்டுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுப்ரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் குற்றவாளிக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனையும் விதித்தார்.
மேலும் சாகும் வரை சுப்ரமணியன் சிறையில் தான் இருக்க வேண்டும் என்றும், இறந்த பின் சடலமாகத் தான் வெளியே வர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Thanjai Court orders 4 life sentence in minor rape case.