ஆப்நகரம்

புளூ வேல் கேம் தாக்கம் : தற்கொலைக்கு முயன்றவர்கள் உயிருடன் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரில் புளூவேல் கேம் விளையாடிய சிறுவன் தனது கையை கத்தியால் வெட்டிக்கொண்டுள்ளார் , அதேபோல் புதுச்சேரியில் புளூ வேல் கேம் விளையாடிய இளம் பெண்ணை போலிசார் மீட்டுள்ளனர்.

TNN 3 Sep 2017, 7:23 pm
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரில் புளூவேல் கேம் விளையாடிய சிறுவன் தனது கையை கத்தியால் வெட்டிக்கொண்டுள்ளார் , அதேபோல் புதுச்சேரியில் புளூ வேல் கேம் விளையாடிய இளம் பெண்ணை போலிசார் மீட்டுள்ளனர்.
Samayam Tamil the blue whale game 6 th stand boy in namakkal and 23 year girl in puducherry
புளூ வேல் கேம் தாக்கம் : தற்கொலைக்கு முயன்றவர்கள் உயிருடன் மீட்பு


சிறுவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து அவர்களை தற்கொலைக்கு தூண்டும் கேம்தான் இந்த புளூவேல் சேலஞ்ச் .

ரஷ்யாவில் தான் இந்த கேம் முதலுலில் உருவாக்கபட்டதாகவும் , இந்த கேமை கண்டுபிடித்தவர் மனோத்துவம் படித்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 30 மேற்பட்ட குழந்தைகள் இந்த புளூவேல் கேமிற்கு பலியாகியுள்ளனர்.
சென்ற வாரம் மதுரையை சேர்ந்த மாணவன் புளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்துகொண்டார். இதன் பிறகுதான் இந்த விளையாட்டின் கோர முகம் தமிழகத்தில் வெளிவரத்தொடங்கியது.

தற்போது இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டதில் உள்ள பரமத்தி வேளூரில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் புளூ கேம் விளையாடியுள்ளார். இதன் தாக்கத்தால் அவர் தனது கையை வெட்டிகொண்டுள்ளார். இதனை கண்டுபிடித்து பெற்றோர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

இதேபோல் புளூ வேல் கேமை தனது தோழி விளையாடுவதாக புதுச்சேரி உதவி கண்காணிப்பாளர் கீர்த்திக்கு ஒரு பெண் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதன் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள தேசிய வங்கியில் பணியாற்றும் பிரியாவை உதவி கண்காணிப்பாளர் கீர்த்தி விசாரித்தார். இந்த விசாரணையின் போது அந்த பெண் தனது கைபேசியில் புளூ வேல் கேம் இருந்தது தெரியவந்தது. இதன்பிறகு காவல்துறையினர் அவருக்கு ஆலோசனை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

The blue whale game 6 th stand boy in Namakkal and 23 year girl in Puducherry

அடுத்த செய்தி