ஆப்நகரம்

பாறைகளுக்கு இடையில் சிக்கிய மாணவன்; 2 மணி நேரம் போராட்டம்

திருத்தணி அருகே பாறைகளுக்கு இடையே சிக்கிய மாணவனை 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

TNN 8 Sep 2017, 1:41 pm
திருத்தணி அருகே பாறைகளுக்கு இடையே சிக்கிய மாணவனை 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் மீட்டனர்.
Samayam Tamil the boy got inside rock and rescued
பாறைகளுக்கு இடையில் சிக்கிய மாணவன்; 2 மணி நேரம் போராட்டம்


திருவள்ளூர் மாவட்டம் திருத்திணி, டாக்டர். ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராகேஷ் என்பவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை ராகேஷ் மற்றும் அவருடைய நண்பர்களும் அருகிலுள்ள பச்சரிசி மலைக்கு சென்றுள்ளனர். மலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக பாசிபடிந்த பாறையில் ராகேஷ் கால் வைத்ததால், வழுக்கி விழுந்தார் , வழுக்கி விழுந்ததில் , மாணவர் ராகேஷின் கால் மற்றொரு பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்டது. இதனால், பயந்து போன ராகேஷின் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு ஒடினர்.

சிறிது நேர பேராட்டத்திற்கு பிறகு ராகேஷ் தனது மொபைல் போன் மூலம் வீட்டுக்கு தெரியப்படுத்தியுள்ளார். சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உடனடியாக உறவினர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் பச்சரிசி மலைக்கு விரைந்து சென்று, இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ராகேஷை பாறையின் இடுக்கில் இருந்து மீட்டனர். பின்னர், மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

the boy got inside rock and rescued

அடுத்த செய்தி