ஆப்நகரம்

மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி மீது கல்வீச்சு!!

ஈரோட்டில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கொடுத்த பாலியல் தொல்லையால் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து அந்த பகுதி மக்கள் பள்ளி மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.

TNN 9 Aug 2017, 5:39 pm
ஈரோட்டில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கொடுத்த பாலியல் தொல்லையால் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து அந்த பகுதி மக்கள் பள்ளி மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.
Samayam Tamil the female students was of school was molested by p t master and she attempted suicide
மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி மீது கல்வீச்சு!!


ஈரோட்டில் பவானி அருகேயுள்ள பூதப்பாடியில் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் உடற்கல்வி ஆசிரியர் தவறாக நடந்துள்ளார். இதனை யாரிடமும் சொல்ல முடியாமல் அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்கொலைக்கு முயற்சி செய்த அவரை மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர் .

இதன் பிறகே நடந்த சம்பவத்தை அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோரும் , அந்தப் பகுதி மக்களும் அந்த ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்க பள்ளி நிர்வாகத்திடம் இன்று முறையிட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த பதிலும் கூறாததால் ஆத்திரத்தில் பள்ளி மீது கல்வீசினர் . இதனால் பதற்றம் ஏற்பட்டது.

அடுத்த செய்தி