ஆப்நகரம்

இந்தியாவை சேர்ந்த சைக்கோ சீரியல் கில்லர்! 931 பேரை கொன்று குவித்தவன்!!

இந்தியாவை சேர்ந்த சைக்கோ சீரியல் கில்லர்! 931 பேரை கொன்று குவித்தவன்!!

TOI Contributor 12 May 2017, 2:11 pm
இந்தியாவை சேர்ந்த ஒருவன் உலகின் பயங்கர சீரியல் கில்லராக இருந்துள்ளான். டெல்லி ஜபல்பூரை சேர்ந்த தக் பெஹ்ராம் எனும் நபர் உலகின் பயங்கரமான சைக்கோ கொலைகாரன் ஆவான். Thug என்றால் கொள்ளைக்காரன் என்று பொருள். ஆனால் இந்த வார்த்தை Thag எனும் ஹிந்தி வார்த்தையில் இருந்து மருவியது.
Samayam Tamil the indian serial killer who killed more than 900 people
இந்தியாவை சேர்ந்த சைக்கோ சீரியல் கில்லர்! 931 பேரை கொன்று குவித்தவன்!!


18 மற்றும் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தக் பெஹ்ராம் எனும் பெயரில் இருந்துதான் இந்த வார்த்தை வந்ததாக கூறப்படுகிறது. தக் பெஹ்ராம் மற்றும் அவனது கூட்டம் பணம், பொருள் மற்றும் மதத்திற்காக பலரை கொலை செய்துள்ளனர். வழிப்பறி, கொள்ளை மற்றும் கொல்லை செயல்களில் ஈடுபட்ட பெஹ்ராம் சுமார் 931 பேரை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. வணிகம் சம்பந்தமாக டெல்லி ஜபல்பூர் வழியாக பயணம் செய்தவர்கள் பெஹ்ராமுக்கு பயந்து வேறு வழியில் பயணம் செய்ய தொடங்கினர்.

மஞ்சள் நிற கர்சீப்பை கொண்டு மக்களின் கழுத்தை நெரித்து கொல்வதை இந்த கும்பல் வழக்கமாக கொண்டிருந்தது. 1800 தொடங்கத்தில் மக்கள் பலரும் காணாமல் போக தொடங்கியதும் தான் பெஹ்ராம் குறித்து தெரியவந்தது. சிலிமேன் என்பவர் பெஹ்ராம் மற்றும் அவனது கூட்டத்தை பிடிக்க வந்தார். ஆனால் அந்த கூட்டத்தை கைது செய்ய அவருக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டது.

தக் பெஹ்ரம் தனது 74வது வயதில் கைது செய்யப்பட்டான். அப்போது அவன் தன் வாழ்நாளில் 931 கொலைகள் செய்திருந்தான். காளியின் பக்தனான பெஹ்ராம் அப்பாவி மக்களை கொல்வது காளியை மகிழ்விக்கும் செயல் என்றும் கூறிவந்துள்ளான்.

அடுத்த செய்தி