ராமநாதபுரம் மாவட்டதில் உள்ள அழகன்குளத்தில் பண்டைய கால தமிழர்களின் வாழ்க்கையை விளக்கும் வரலாற்றுச் சுவடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அழகன்குளத்தில் பண்டைய கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் தென்படத் தொடங்கியதையடுத்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த அகழாய்வுப் பணியில், பல்வேறு அரியவகை வரலாற்றுச் சுவடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக சுடுமண் சிற்பங்கள், யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள், மண் பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை ஆய்வு செய்த போது அவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையானது என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய தரைகடல் நாடுகளுடன் தமிழர்கள் மேற்கொண்ட வணிகத்தையும் இந்த பொருட்கள் உணர்த்துகின்றன.
ஏற்கனவே கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை என்று அகழ்வாராய்ச்சில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. மேலும் இதுபோன்ற அகழ்வாரய்ச்சி பணிகளில் மாநில அரசுகள் கவனம் செத்துவதில்லை .
பொதுவாக இந்திய வரலாற்றில் ஆரிய சீந்து சமவேளி நாகரீகம்தான் முதல் நாகரீகமாக இருந்து வந்தது. ஆனால் தமிழகத்தில் நடந்துவரும் அழ்வாராய்ச்சி பணிகள் யாவும் தமிழர்தான் முதல் நாகரீகம் என்று நிரூபித்து வருகிறது.
கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் வரலாறுதான் மூத்த வரலாறு என்று கண்டுபிடிக்கப்பட்டால் ஆரிய வரலாறு பொய்யாகிவிடும் என்பதாலயே இந்த கீழடி அகழ்வாராய்ச்சியில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அழகன்குளத்தில் பண்டைய கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் தென்படத் தொடங்கியதையடுத்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த அகழாய்வுப் பணியில், பல்வேறு அரியவகை வரலாற்றுச் சுவடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக சுடுமண் சிற்பங்கள், யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள், மண் பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை ஆய்வு செய்த போது அவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையானது என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய தரைகடல் நாடுகளுடன் தமிழர்கள் மேற்கொண்ட வணிகத்தையும் இந்த பொருட்கள் உணர்த்துகின்றன.
ஏற்கனவே கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை என்று அகழ்வாராய்ச்சில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. மேலும் இதுபோன்ற அகழ்வாரய்ச்சி பணிகளில் மாநில அரசுகள் கவனம் செத்துவதில்லை .
பொதுவாக இந்திய வரலாற்றில் ஆரிய சீந்து சமவேளி நாகரீகம்தான் முதல் நாகரீகமாக இருந்து வந்தது. ஆனால் தமிழகத்தில் நடந்துவரும் அழ்வாராய்ச்சி பணிகள் யாவும் தமிழர்தான் முதல் நாகரீகம் என்று நிரூபித்து வருகிறது.
கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் வரலாறுதான் மூத்த வரலாறு என்று கண்டுபிடிக்கப்பட்டால் ஆரிய வரலாறு பொய்யாகிவிடும் என்பதாலயே இந்த கீழடி அகழ்வாராய்ச்சியில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.