ஆப்நகரம்

தீபாவளியை ஒளிமயமாக்க மதுவை கை விடுங்கள்: முதியோர் இல்லத்தின் விழிப்புணர்வு முயற்சி

மது இல்லாத, மகிழ்வான தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்களை கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 26 Oct 2018, 6:01 pm
மது இல்லாத, மகிழ்வான தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்களை கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil 44460907_1749298301834245_5537454811647049728_n


தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் புத்தாடைகள், இனிப்புகள்மற்றும் பட்டாசுகள் எல்லாம் தாயாராகிக் கொண்டிருக்கிறது.வருடம் முழுவதும் கடினமாக உழைத்து, தீபாவளி போனஸ்அறிவிக்கப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். ஆனால் இந்த தீபாவளியில் கூட நல்ல உணவு மற்றும் புத்தாடைகள் இல்லாமல் இருப்பவர்கள் அதிகம்.

ஆனால்நமக்குள் இருக்கும் கெட்ட பழக்கங்களால் பண்டிகை நாட்கள்கூட நரகமாகும் நிலை பல குடும்பங்களுக்கு ஏற்படுகிறது.

இந்நிலையில் கோவை’ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் குடியை மறப்போம் குடும்பத்தைக் காப்போம்என்று விழிப்புஉணர்வு நோட்டீஸ் அச்சிடப்படுள்ளது. அதில் கூறப்படுள்ளதாவது ‘தற்போது பண்டிகைக் காலம். உங்களது கடின உழைப்பின் அங்கீகாரமாகக் கிடைப்பது போனஸ். நண்பர்களே சிந்தியுங்கள். வியர்வை சிந்தி உழைத்த பணம், உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பண்டிகை கொண்டாடவா அல்லது உங்கள் உயிரைக் கொல்லும் மது அருந்தவா? உலகில், பெரும்பாலான குழந்தைகள் இந்த நிலைக்குத் தள்ளப்படுவதற்கு பெற்றோர்களின் இந்தக் குடிப்பழக்கமே முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்த நிலை நாளை உங்கள் குடும்பத்துக்கும் வர வேண்டாமே’’ என்று எழுதப்படுள்ளது.

இந்த நோட்டீஸ்கள்ஈரநெஞ்சம் ஆதரவற்றோர்காப்பகத்தின்முதியோர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகின்றது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்