ஆப்நகரம்

வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை புகைப்படம் எடுத்த மாணவனுக்கு தர்ம அடி!!

தெலுங்கானாவில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை புகைப்படம் எடுத்து கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பிய மாணவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 1 Aug 2017, 1:18 pm
தெலுங்கானாவில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை புகைப்படம் எடுத்து கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பிய மாணவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil the police men beat violently a boy for taking photograph of teacher who was sleeping
வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை புகைப்படம் எடுத்த மாணவனுக்கு தர்ம அடி!!


மெஹபூநகரில் இயங்கி வரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கியுள்ளார். இதனைப் பார்த்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த 2 காவல்துறையினர் அந்த மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

காவல்துறையினர் அந்த மாணவனை தாக்கியபோது ஆசிரியர்கள் யாரும் தடுக்க முன்வரவில்லை. வகுப்பறையில் ஆசிரியர் தூங்கியதை புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிக்கு அனுப்பியதால் , மற்ற ஆசிரியர்களின் தூண்டுதலின்பேரில் காவல்துறையினர் அந்த மாணவரை தாக்கினர் என்று கூறப்படுகிறது.

the police men beat violently a boy for taking photograph of teacher who was sleeping

அடுத்த செய்தி