ஆப்நகரம்

வைஃபை ஏற்படுத்தும் பயங்கரங்கள்!!

முன்பெல்லாம் இரவு நேரங்களில் படுக்கைக்கு செல்லும் முன்பு எதாவது புத்தகம் படித்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நிலையை ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்சஸ், டேப்ளட்ஸ், லேப்டாப் ஆகியவை மாற்றிவிட்டன.

TOI Contributor 30 May 2016, 2:24 pm
முன்பெல்லாம் இரவு நேரங்களில் படுக்கைக்கு செல்லும் முன்பு எதாவது புத்தகம் படித்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நிலையை ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்சஸ், டேப்ளட்ஸ், லேப்டாப் ஆகியவை மாற்றிவிட்டன.
Samayam Tamil 7
வைஃபை ஏற்படுத்தும் பயங்கரங்கள்!!


இவை அனைத்தும் இயங்க பின்பலமாக இருப்பது வைஃபை. தற்போது இந்த இணைப்பை பெற 4ஜி வரை தொழில்நுட்பம் உயர்ந்துவிட்டது. உங்களது நண்பருடன் தொடர்பு வைத்துக் கொள்ள, தகவல்களை சேகரிக்க, விருப்பமானவற்றை படுத்துக் கொண்டே பார்க்க, ஃபேஸ்புக்கில், வாட்ஸ் ஏப்பில் பகிர என இவை அனைத்துக்கும் வைஃபை இணைப்பு வேண்டும்.

பலரும் தற்போது இந்த இணைப்பை வீடுகளில் பெற்று 24/7 நேரமும் இயக்கி வருகின்றனர். இதனால், உடம்புக்கு பல ஆபத்துகள் உள்ளன. குறிப்பாக இதில் இருந்து குறைந்த அளவில் வெளியேறும் கதிரியக்கம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அடிக்கடி தலைவலி, தூக்கத்தில் மாற்றம், அதிகப்படியான தலை சுற்றல், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஏன் புற்று நோய்க்கும் இட்டுச் செல்லும் என்பது தெரிய வந்துள்ளது.

செல்போனில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோமேக்னடிக் அலையும் நமது மூளையைக் கட்டுப்படுத்தும் என்று ஏற்கனவே தெரிய வந்துள்ளது.

இதற்கு தற்போது அதிகளவில் அடிமையாகி இருப்பது குழந்தைகள்தான். ஆதலால் இந்த ஆபத்தில் இருந்து குழந்தைகளை மீட்டு எடுக்க புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

அடுத்த செய்தி