ஆப்நகரம்

புளூவேல் விளையாட்டை உருவாக்கியது யார் தெரியுமா?

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரை குறிவைக்கும் புளூ வேல் கேமை ரஷ்யாவை சேர்ந்த 22 வயது இளைஞர்தான் கண்டு பிடித்துள்ளார் .

TNN 30 Aug 2017, 2:19 pm
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரை குறிவைக்கும் புளூ வேல் கேமை ரஷ்யாவை சேர்ந்த 22 வயது இளைஞர்தான் கண்டு பிடித்துள்ளார் .
Samayam Tamil the russian 22 year old boy invented blue whale game
புளூவேல் விளையாட்டை உருவாக்கியது யார் தெரியுமா?


2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய விளையாட்டு புளூவேல் சேலஞ்ச் . இந்த கேமை 22 வயது நிரம்பிய உளவியல் படித்த மாணவர் உருவாக்கியுள்ளார்.

50 படி நிலைகள் (லெவல்) வரை கொண்டது இந்த இணையதள கேம். நல்லிரவில் திகில் படம் பார்ப்பது, ஆளில்லாத உயரமான இடத்தில் தன்னந்தனியே நடந்து செல்வது, திமிங்கலத்தின் உருவத்தை கையில் பிளேடால் வரைவது என பல படிநிகைகளை கொண்டது. இந்த விளையாட்டின் கடைசி நிலை தற்கொலை செய்துகொள்வது .

இந்த விளையாட்டுக்கு ரஷ்யா, சீனா நாடுகளில் நூற்றுக் கணக்கான சிறுவர்களும் , இளைஞார்களும் உயிரிழந்துள்ளனர். மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு விசயமும் இந்தியாவிற்கு வருவது போல் தற்போது வந்திருப்பதுதான் இந்த புளூவேல் கேம்.

இந்த நிலையில் தான் கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், யாகூ நிறுவனங்கள்‌ இந்த விளையாட்டையும், அதன் தொடர்பு வலையையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆயினும் இன்னும் இந்த விளையாட்டுக்கான தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பாய் மற்றும் கேரளாவில் இந்த உயிர்கொல்லி விளையாட்டால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

புளூவேல் ஆன்லைன் விளையாட்டில் பிள்ளைகள் ஈடுபடாமல் தடுக்க, கண்காணிக்குமாறு பெற்றோருக்கு சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

புளூவேல் விளையாட்டை சைபர் கிரைம் மூலம் கண்காணிக்க முடியாது எனவும், பெற்றோர்கள் கவனமாக இருப்பதன் மூலமாகவே குழந்தைகளை பாதுகாக்க முடியும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

the russian 22 year old boy invented blue whale game

அடுத்த செய்தி