ஆப்நகரம்

இறந்த சகோதரனுக்கு ராக்கி கட்டிய தங்கை!!

நண்பர்கள் தினத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞருக்கு அவரது சகோதரி ரக்ஷா பந்தன் தினத்தில் கண்ணீருடன் ராக்கி கட்டி துக்கம் அனுஷ்டித்தார்.

TNN 9 Aug 2017, 10:26 am
நண்பர்கள் தினத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞருக்கு அவரது சகோதரி ரக்ஷா பந்தன் தினத்தில் கண்ணீருடன் ராக்கி கட்டி துக்கம் அனுஷ்டித்தார்.
Samayam Tamil the youngster died as he went to celebarate friendship day his sister ties rakhee to his dead body
இறந்த சகோதரனுக்கு ராக்கி கட்டிய தங்கை!!

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், திருப்பூரு பகுதியை சேர்ந்த இளைஞர் வினோத் . இவருக்கு வயது 22 . கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை கொண்டாட தனது நண்பர்களுடன் பேத்தபல்லி ஏரிக்கு சென்றார். நண்பர்களுடன் ஏரியில் குளித்துவிட்டு நண்பர்கள் கரை ஏறியபோது வினோத்தை மட்டும் காணவில்லை.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினரும், கிராம மக்களும் ஏரியில் பல மணி நேரமாக தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.
மறுநாள் அவரது சடலத்தை மீட்டனர்.


உடனடியாக அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடந்த சம்பவம் குறித்து வினோத்தின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.


மருத்துவமனைக்கு வந்த வினோத்தின் குடும்பத்தினர் கதறி அழுதனர். தனது அண்ணனின் உடலைப் பார்த்து அவரது தங்கை கதறி அழுதார். தனது அண்ணனுடன் ஆனந்தமாக கொண்டாட வேண்டிய ரக்க்ஷா பந்தன் தினத்தை, தனது உயிரற்ற அண்ணனின் கையில் ராக்கி கட்டி துயரத்தில் ஆழ்ந்தார்.

the youngster died as he went to celebarate friendship day: his sister ties rakhee to his dead body

அடுத்த செய்தி