ஆப்நகரம்

தி.நகர் தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

தி. நகரிலுள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 10 Jan 2017, 1:03 pm
சென்னை : தி. நகரிலுள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil theft in chnnai tnagar business man house
தி.நகர் தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை


சென்னை திநகர் பசுல்லா சாலையில் வசித்து வருபவர் கைலாஷ் (58). எல்.இ.டி பல்புகள் விற்பனையை பெருமளவில் செய்து வருகிறார். இவரும் இவருடைய குடும்பத்தினரும் நேற்று முன் தினம் இரவு தங்களது வீட்டில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

பின்னர் காலையில் எழுந்த அவர் தனது வீட்டு ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பீரோவில் இருந்த 100பவுன் தங்க நகையும் 5 கிலோ வெள்ளிப்பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்த அவர் போலீஸில் புகார் அளித்தார் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டிலுள்ள கைரேகைகளை பதிந்து விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி