ஆப்நகரம்

அடப்பாவமே! : ஹெல்மெட்டுடன் பணிபுரியும் அரசு ஊழியர்கள்

பீகார் மாநில அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் ஹெல்மட் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

Indiatimes 14 Jul 2017, 10:43 pm
பாட்னா : பீகார் மாநில அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் ஹெல்மட் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
Samayam Tamil these employees are wearing helmets to work
அடப்பாவமே! : ஹெல்மெட்டுடன் பணிபுரியும் அரசு ஊழியர்கள்

பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அரசு அலுவலகக் கட்டடம் உள்ளது . இந்த கட்டிடம் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட்டுடன் பணிபுரிந்து வருகின்றனர்.

அலுவலகத்தின் மேற்கூரையிலிருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் ஸ்லாப்புகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. அந்த கட்டடம் அபாயகரமானது என்று பீகார் மாநில பொதுப்பணித்துறையினர் கடந்த ஆண்டே அறிவித்தது. ஆனாலும் அலுவலகத்துக்காக மாற்றாக புதிய கட்டடம் ஒதுக்கப்படவில்லை .

இதனால் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த கட்டடத்திலேயே வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது . மேற்கூரையில் இருந்து கற்கள் பெயர்ந்து விழுந்ததில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களது தலையை அந்த கட்டத்தில் இருந்து பாதுக்காத்துக்கொள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் ஹெல்மட் அணிந்து அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
Worried That The Roof Could Collapse Any Minute, These Employees Are Wearing Helmets To Work

அடுத்த செய்தி