ஆப்நகரம்

உறைந்த நீர்வீழ்ச்சியில் ஏறி சாதனை படைத்த இந்தியர்கள்: ஆச்சரிய நிகழ்வு

உறைந்த நீர்வீழ்ச்சியில் ஏறி, இரண்டு இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

TNN 26 Mar 2017, 4:43 pm
சிம்லா: உறைந்த நீர்வீழ்ச்சியில் ஏறி, இரண்டு இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Samayam Tamil these two men decided to risk everything to climb a frozen waterfall
உறைந்த நீர்வீழ்ச்சியில் ஏறி சாதனை படைத்த இந்தியர்கள்: ஆச்சரிய நிகழ்வு


உண்மையான ஹீரோக்களை எவ்வாறு இனம் கண்டு கொள்வீர்கள்? நினைத்துப் பார்க்க முடியாத, வழக்கத்திற்கு மாறான விஷயங்களை செய்யும் போது அவர்கள் உலகிற்கு வெளிப்படுவார்கள். கடின இலக்குகளை, அதன் சிக்கல்களை அறிந்தும் அடைய முயற்சிக்க தயாராக இருப்பார்கள். சவால்களை மட்டுமே உற்று நோக்கி, தங்கள் இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள். அவ்வாறு இதுவரை டிரக்கிங்கில் ஈடுபடாத இருவர், உறை நீர்வீழ்ச்சியில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது ஸ்பிடி பள்ளத்தாக்கு. அங்கு வெப்பநிலை உறைநிலையை ஒட்டி இருப்பதால், நீர் பனிக்கட்டிகளாக காணப்படும். இந்நிலையில் பிரணவ் ராவத் மற்றும் அபிஷீத் சிங் ஆகியோர் அந்த நீர்வீழ்ச்சியில் ஏற திட்டமிட்டனர். அதற்கான முன்னேற்பாடுகள் செய்த பின்னர், மெல்லிய பனிக்கட்டிகளாக காணப்படும் நீர்வீழ்ச்சியில் கைக் கோடாரிகளை பயன்படுத்தி ஏறி கடந்தனர். சாதனைப் படைக்க மனம் துணிந்து விட்டால், எத்தனை தடைகள் வந்தாலும் மீண்டு எழுவோம் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த நிகழ்வு அமைந்துள்ளது.

These Two Men Decided To Risk Everything To Climb A Frozen Waterfall.

அடுத்த செய்தி