ஆப்நகரம்

கொள்ளையடித்த இடத்தில் தூங்கிய திருடன்; விடியும் வரை தூங்க விட்டு, கைது செய்த போலீசார்!

கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில், அசந்து தூங்கிய திருடனை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.

TNN 24 Nov 2017, 2:02 am
எடின்பர்க்: கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில், அசந்து தூங்கிய திருடனை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.
Samayam Tamil thief falls asleep when robbery wakes up scotland police
கொள்ளையடித்த இடத்தில் தூங்கிய திருடன்; விடியும் வரை தூங்க விட்டு, கைது செய்த போலீசார்!


ஸ்காட்லாண்ட் நாட்டின் தலைநகர் எடின்பர்க் நகரில் வீடு ஒன்றில் திருடன் நுழைந்தான். இதையடுத்து அங்கிருந்த உணவை நன்றாக சாப்பிட்டுள்ளான். பின்னர் அசதியில் அங்கேயே படுத்து உறங்கியுள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்துள்ளது. நள்ளிரவிலே செய்தி அறிந்தும், விடிந்த பிறகே சம்பவ இடத்திற்கு சென்று சாவகாசமாக கைது செய்தனர்.

அதாவது திருடனுக்கு சர்ப்ரைஸ் அளிக்கவே இதுபோன்று செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Sleeping on the Job!We all feel tired when we start a shift & a thief who started his shift at 2345 yesterday was no different. He broke into a house on Corsewall St, decided on a pit stop, ate half a pie and fell asleep covered in Doritos. He woke up in cuffs #fingerlickinggood— MonklandsPolice (@MonklandsPol) November 21, 2017 இந்த நிகழ்வை ஸ்காட்லாண்ட் போலீஸ், நகைச்சுவையாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Thief falls asleep when robbery wakes up Scotland police.

அடுத்த செய்தி