ஆப்நகரம்

ஆட்டையப் போட போய் ஆஸ்பத்திரியில் அட்மிட்டான திருடன்

மதுரையில் வீடு ஒன்றில் திருட முயன்று மரத்தில் ஏறிய திருடனை வீட்டில் உரிமையாளரே மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியுள்ளார்.

TNN 11 Dec 2017, 8:10 pm
மதுரையில் வீடு ஒன்றில் திருட முயன்று மரத்தில் ஏறிய திருடனை வீட்டில் உரிமையாளரே மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியுள்ளார்.
Samayam Tamil thief falls off tree while trying enter madurai home house owner sends him to hospital
ஆட்டையப் போட போய் ஆஸ்பத்திரியில் அட்மிட்டான திருடன்


மதுரை மாவட்டம் விளங்குடியில் உள்ள அம்பேத்கர் காலணியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது வீட்டுக்கு அருகிலேயே உள்ள செந்தாமரைத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டில் திருட முயன்றிருக்கிறார்.

இதற்காக ஞாயிற்றுக்கிழமை மதியம் தென்னை மரத்தில் ஏறிய சுரேஷ் கால் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இவர் காயமடைந்து கிடப்பதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக 108 ஆம்புலென்சுக்கு தகவல் தெரிவித்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி