ஆப்நகரம்

திருவள்ளூரில் அடுத்தடுத்து காணாமல் போகும் இளம்பெண்கள்: இதுவரையில் 16 பேர் மாயம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் அடுத்தடுத்து காணாமல் போகும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Apr 2018, 11:36 am
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் அடுத்தடுத்து காணாமல் போகும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil woman missing


திருவள்ளூர் மாவட்டத்தில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள், சிறுமிகள் அடுத்தடுத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த யுவராணி (20), நதியா (21) மற்றும் அவரது தங்கை மதுமிதா (10), ஈக்காடுகண்டிகையைச் சேர்ந்த ஹேம பிரியா (19) உட்பட பலர் மாயமாகி உள்ளனர். இவர்களில் பலர் வேலைக்குச் செல்வோரும், கல்லூரி மாணவிகளும் ஆவார். மேலும், சிறுமிகளும் காணாமல் போயுள்ளதால், பெற்றோர்கள் பதற்றத்தில் உள்ளனர். இவ்வாறு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட குடும்பங்கள் மட்டுமே 16. புகார் அளிக்காமல் பல பெற்றோர்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது,

இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், காணாமல் போன பெண்கள் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி