ஆப்நகரம்

சாக்லேட் கொடுத்து சிறுமி கடத்தல்; சாமர்த்தியமாக தப்பிச் சென்ற துணிச்சல்

கடத்தல்காரர்களிடம் இருந்து 5 வயது சிறுமி சாமர்த்தியமாக தப்பித்து சென்றுள்ளார்.

TNN 1 Jun 2017, 10:24 am
தாரவி: கடத்தல்காரர்களிடம் இருந்து 5 வயது சிறுமி சாமர்த்தியமாக தப்பித்து சென்றுள்ளார்.
Samayam Tamil this 5 year old mumbai girl outwitted and escaped her kidnapper
சாக்லேட் கொடுத்து சிறுமி கடத்தல்; சாமர்த்தியமாக தப்பிச் சென்ற துணிச்சல்


மகாராஷ்டிர மாநிலம் தாரவியைச் சேர்ந்த பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளருக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. அதனால் தனது நண்பர் மற்றும் வியாபார பார்ட்னருடன் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து வியாபார நண்பரின் 5 வயது சிறுமியை கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்காக வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ரூ.50 பணம் கொடுத்து, வெளியே செல்லலாம் என்று அழைத்துள்ளார். ஆனால் சிறுமி அதனை ஏற்கவில்லை. பின்னர் சிறுமிக்கு சாக்லேட்கள் கொடுத்த போது, அவள் வெளியே செல்ல சம்மதித்துள்ளார்.

உடனே அவளை தன் கட்டுப்பாட்டில் கடத்தி வைத்துக் கொண்டு, அவள் பெற்றோரிடம் ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். இதற்கிடையில் சிறுமி சாமர்த்தியமாக தப்பித்து, தனது தந்தையின் கடைக்கு சென்றுள்ளார். அங்கு நடந்த நிகழ்வுகளை கூறியதை அடுத்து, அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தனது மகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யுமாறும் சிறுமியின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.

This 5-Year-Old Mumbai Girl Outwitted And Escaped Her Kidnapper.

அடுத்த செய்தி