ஆப்நகரம்

கொஞ்சம் நல்லவங்க இருக்கத்தான் செய்றாங்க: இளம்பெண்ணை கரைசேர்த்த ஆட்டோக்காரர்

உரிய நேரத்தில் பணம் கொடுத்து, இளம்பெண்ணிற்கு உதவி செய்த ஆட்டோ ஓட்டுநரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

TNN 19 Apr 2017, 2:39 pm
ஐதராபாத்: உரிய நேரத்தில் பணம் கொடுத்து, இளம்பெண்ணிற்கு உதவி செய்த ஆட்டோ ஓட்டுநரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Samayam Tamil this autowala helped out a girl who ran out of money
கொஞ்சம் நல்லவங்க இருக்கத்தான் செய்றாங்க: இளம்பெண்ணை கரைசேர்த்த ஆட்டோக்காரர்


தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாபா. அவரின் ஆட்டோவில் வரிஜாஸ்ரீ வேணுகோபால் என்ற பெண், விசா விண்ணப்பிக்க சென்றுள்ளார். அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பம் செலுத்த சென்றார். அப்போது ரூ.5000 பணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் ரூ.3000 மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து அருகிலுள்ள 15க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் பணத்தை தேடியுள்ளார்.



ஆனால் எதிலும் பணம் இல்லை. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தான் சேர்த்து வைத்திருந்த ரூ.3000 பணத்தை வரிஜாஸ்ரீவிடம் அளித்துள்ளார். அதைக் கொண்டு, வரிஜாஸ்ரீ விசா நடைமுறைகளை பூர்த்தி செய்துள்ளார். பாபாவிற்கு நன்றி தெரிவித்த வரிஜாஸ்ரீ, இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். உரிய நேரத்தில் உதவி செய்த பாபாவிற்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

This Autowala Helped Out A Girl Who Ran Out Of Money & Proved There's Still Good Left In The World.

அடுத்த செய்தி