ஆப்நகரம்

வறுமையிலும் ஒன்பது பள்ளிகளைத் திறந்த ரிக்‌ஷா ஓட்டுநர்!

அசாமைச் சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநர், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக, கடந்த 40 ஆண்டுகளில் ஒன்பது பள்ளிகளை திறந்த ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 25 Mar 2018, 2:55 pm
அசாமைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநர், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக, கடந்த 40 ஆ ண்டுகளில் ஒன்பது பள்ளிகளை திறந்த ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil வறுமையிலும் ஒன்பது பள்ளிகளைத் திறந்த ரிக்‌ஷா ஓட்டுநர்!
வறுமையிலும் ஒன்பது பள்ளிகளைத் திறந்த ரிக்‌ஷா ஓட்டுநர்!


அசாமின் கரீம்கஞ்சு மாவட்டத்தைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநர் அஹ்மத் அலி. குடும்பச் சூழல் மற்றும் வறுமை காரணமாக இவரால் கல்வி பயில முடியவில்லை. தனது குடும்பத்தை நிர்வகிக்க மிகவும் இளம் வயதிலேயே ரிக்‌ஷா ஓட்டத் துவங்கிய அஹமத், தன்னைப் போல அடுத்த தலைமுறையினரும் படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்று எண்ணினார். அதனால் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக பள்ளி கட்ட முடிவு செய்தார்.

ஆனால் அவரிடம் பள்ளிக்கட்டும் அளவிற்கு போதிய வருவாய் இல்லை. எனவே தனது நிலத்தை விற்பனை செய்து பணம் ஏற்பாடு செய்தார். மேலும் கிராம மக்களிடம் இருந்தும் பணம் சேகரித்தார். இறுதியில் 1978-ம் ஆண்டு தனது முதல் பள்ளியைத் அஹமத் திறந்தார். இப்படி கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் தனது பகுதியில் ஒன்பது பள்ளிகளை அஹமத் திறந்து வைத்துள்ளார்.

வறுமையிலும் ஒன்பது பள்ளிகளைத் திறந்த ரிக்‌ஷா ஓட்டுநர்!


மூன்று ஆரம்ப துவக்கப் பள்ளிகளையும், ஐந்து ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் நடுநிலைப் பள்ளிகளையும், ஒரு உயர்நிலைப் பள்ளியையும் கட்டியுள்ள அஹமத், விரைவில் ஒரு கல்லூரி கட்டவும் விரும்புகிறார். இவருக்கு இரண்டு மனைவிகளும் ஏழு குழந்தைகளும் உள்ளனர்.

தனது பள்ளிகளின் வாயிலாக வருவாய் ஈட்ட விரும்பாத அஹமத் கூறுகையில், படிப்பறிவின்மை எந்த ஒரு சமூகத்திற்கும் சாபக்கேடு என்றும், இதனால் வாழ்வதற்கான ஆதாரமே இல்லாமல் போகும் என்றும் கூறுகிறார். மேலும் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல பணியில் அமர்வதை தனது திருப்தி என்றும் மெய்சிலிர்க்கிறார் ரிக்‌ஷா ஓட்டுநர் அஹமத் அலி.

அடுத்த செய்தி