ஆப்நகரம்

ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம மரணம் : கள்ளக்காதலால் வந்த வினை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைக்கு அருகே ஒம்மண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவர்க கடந்த மாதம் 4ம் தேதி தேன்கனிக்கோட்டையில் ஒரு விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

TNN 21 Apr 2017, 2:37 pm
ஒசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைக்கு அருகே ஒம்மண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவர்க கடந்த மாதம் 4ம் தேதி தேன்கனிக்கோட்டையில் ஒரு விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
Samayam Tamil three arrested including a thief sensitive information
ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம மரணம் : கள்ளக்காதலால் வந்த வினை


வடிவேலுவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், வடிவேலுவை அடித்துக்கொன்றதாக பெங்களூரு அருகே உள்ள சந்தனப்பள்ளியை சேர்ந்த் சாக்கப்பா (75), அவர் மகன் பிரேம்குமார் (45), மகள் முனிலட்சுமி (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடன் விசாரணை செய்ததில், அவர்கள் அளித்த வாக்குமூலம் திடுக்கிட வைத்துள்ளது.

அடித்துக்கொலை:
ரியல் எஸ்டேட் தொழிலதிபரான வடிவேலுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவருக்கும் பழைய மடிவாலா பகுதியில் வசித்து வந்தபோது முனிலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் முனிலட்சுமியின் அக்கா மகளுக்கு வேலை வாங்கி தருமாறு 2 லட்சம் ரூபாய் பணத்தை வடிவேலுவிடம், முனிலட்சுமி குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.

ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல், பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வடிவேலுவை தீர்த்துகட்டி அவரிடம் உள்ள பணத்தை பறிக்க திட்டமிட்டனர்.

இதனால் முனிலட்சுமி, வடிவேலுவுக்கு ஆசைவார்த்தை காட்டி போனில் அழைத்துள்ளார். அவருடன் பெங்களுரூவிலிருந்து, தேன்கனிக்கோட்டை அழைத்து சென்றதோடு, முனிலட்சுமி அவரின் தந்தை மற்றும் சகோதரன் சேர்ந்து வடிவேலுவை கட்டையால் அடித்து கொலை செய்தனர். அதன்பின் மது அருந்தி இறந்து கிடப்பது போல ஏற்பாடு செய்து விட்டு தப்பித்தனர். இவர்கள் பெங்களூருவுக்கு தப்பி செல்லும் போது போலீஸார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி