ஆப்நகரம்

திருச்சி: பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி

மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள துவரன்குறிச்சி அருகே, சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விழுந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 6 Sep 2018, 3:26 pm
மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள துவரன்குறிச்சி அருகே, சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விழுந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil திருச்சி: பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
திருச்சி: பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி


திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த வேலய்யன் (65), அவரது மனைவி பெரியம்மாள் (58) மற்றும் மதுரையைச் சேர்ந்த அவரது உறவினர் ஜெயராமன் (33) ஆகியோர் நேற்றிரவு வாகைக்குளம் பகுதியில் இருந்து மணியன்பட்டிக்கு காரில் சென்றுள்ளனர்.

இரவு 2 மணியிளவில், துவரன்குறிச்சி அருகே சென்றபோது, காரை ஓட்டி வந்த ஜெயராமன் காரின் கட்டுப்பாட்டை இழந்தார். இதையடுத்து, சாலையோரமாக இருந்த மைல்கல்லில் மோதி, தலைக்குப்புறமாக அருகே இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்த மூவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களது உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்