மினிலாரி மரத்தில் மோதி விபத்து: 3 பேர் பலி
கோழிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினிலாரி, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
TNN 15 Sep 2016, 12:12 am
கோவை: கோழிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினிலாரி, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவில் இருந்து, வால்பாறை நோக்கி 600 கோழிகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் வால்பாறையைச் சேர்ந்த ஆறுசாமி(31), சரவணகுமார்(29), லாலா ஜாய் ஆகியோர் சென்றனர். இந்நிலையில் திடீரென வாகனம் நிலை தடுமாறிச் சென்று, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 3 பேரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்திற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை என்றும், பிரேக் பிடிக்காமல் இருந்திருக்கலாம் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் 300 கோழிகள் பலியாகின.
இதேபோல் தேகா மரத்தோட்டம் பகுதியில் மினிபேருந்து ஒன்று, ஆட்டோ மீது மோதியதில் ஈஸ்வரி(65) என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவில் இருந்து, வால்பாறை நோக்கி 600 கோழிகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் வால்பாறையைச் சேர்ந்த ஆறுசாமி(31), சரவணகுமார்(29), லாலா ஜாய் ஆகியோர் சென்றனர். இந்நிலையில் திடீரென வாகனம் நிலை தடுமாறிச் சென்று, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 3 பேரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்திற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை என்றும், பிரேக் பிடிக்காமல் இருந்திருக்கலாம் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் 300 கோழிகள் பலியாகின.
இதேபோல் தேகா மரத்தோட்டம் பகுதியில் மினிபேருந்து ஒன்று, ஆட்டோ மீது மோதியதில் ஈஸ்வரி(65) என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.