ஆப்நகரம்

விஷ பாம்பை விழுங்கிய புலி மரணம்

ஹன்சூர் வனப்பகுதியருகே விஷப் பாம்பை விழுங்கி புலி ஒன்று உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNN 22 Sep 2016, 3:10 pm
மைசூரு: ஹன்சூர் வனப்பகுதியருகே விஷப் பாம்பை விழுங்கி புலி ஒன்று உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil tiger eaten venomous snake and died
விஷ பாம்பை விழுங்கிய புலி மரணம்


பெரியபட்னா வனத்தின் அருகே அனேச்சவ்குர் பகுதியில் 9 வயது மதிக்கத்தக்க புலியின் சடலம் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அதன் வயிற்றில் பாம்பின் தலை மற்றும் வால் பகுதி இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், புலியின் உடலில் வேறு எவ்வித காயமும் இல்லை எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பை விழுங்குவதற்கு முன்னதாக புலி உட்கொண்ட எந்த உணவும் செரிக்கவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், புலியின் வயிற்றில் கரடியின் விரல் நகம், தலைமுடி, மானின் எலும்பு இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.


பாம்பு கடித்து புலி இறந்தது கிடையாது எனினும், பாம்பின் விஷம் சுரப்பியை புலி கடித்திருந்தால் அதன் ரத்தத்தில் பாம்பு விஷம் ஏறி இறந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி