ஆப்நகரம்

பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளித்த தமிழிசை வைரலாகும் வீடியோ

சமீபத்தில் சென்னை விமானத்தில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது அவர் பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளித்ததாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 14 Dec 2018, 11:04 am
சமீபத்தில் வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில் 5 மாநிலங்களிலும் பா.ஜ. தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இதை "வெற்றி கரமான தோல்வி" என்று விமர்சித்திருந்தார்.
Samayam Tamil tamilisai


இந்த விமர்சனம் பெரும் விவாத்திற்குள்ளானது. பலர் இந்த "வெற்றிகரமான தோல்வி" குறித்து பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைக்க துவங்கினர்.

இந்நிலையில் இந்த "வெற்றிகரமான தோல்வி" விமர்சனத்திற்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை செளந்திராஜன் மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்களின் மைக்குகள் சிறிய மேடை அமைத்து அந்த மேடையின் மேல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. முதலில் பேட்டியளிக்க அந்த இடத்திற்கு தமிழிசை வந்த போது அவருக்கு மேக் வைத்திருந்த மேடையின் உயரம் சரியாக எட்டவில்லை.

இதையடுத்து அவர் உயரமாக நிற்க ஏதாவது ஸ்டூல் கொடுங்கள் என அருகில் இருந்தவர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் அங்கிருந்த ஒரு தண்ணீர் எடுத்து செல்லும் பக்கெட்டை எடுத்து அதை கவிழ்த்து வைத்து அதன் மீது தமிழிசையை நிற்க வைத்து பேட்டியளிக்க வைத்தனர்.

இந்த சம்பவத்தை அந்த பேட்டியின் போது மீடியாக்கள் பக்கம் நின்ற யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

இந்த வீடியோ எப்படியோ மீம் கிரியேட்டர்கள் கைகளுக்கு கிடைத்து விட அவர்கள் தமிழிசை பேட்டியளிக்கும் போது டிவியில் ஒளிப்பரப்பான வீடியோவையும் அவர் பக்கெட் மீது நின்று பேட்டியளிக்கும் வீடியோவையையும் ஒன்றாக இணைத்து சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். தற்போது அவர் பேட்டியளித்த வீடியோவை விட இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி