ஆப்நகரம்

மகளால் வெடித்த பிரச்சனை; மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்!

மதுரை: அடிக்கடி நடைபெற்று வந்த பிரச்சனை கொடூர கொலையில் முடிந்துள்ளது.

Samayam Tamil 13 Nov 2018, 7:59 pm
மதுரை மாவட்டம் பெரியபூலான்பட்டியைச் சேர்ந்த விவசாயி பெத்தண்ணன்(66). இவரது மனைவி மாரியம்மாள்(60). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
Samayam Tamil Murder


மீனாட்சிபுரத்தில் வசித்து வரும் மகள், தனது பெற்றோரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் பெற்றோரின் வீட்டில் இருந்து ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இது பெத்தண்ணனை கோபமடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக மாரியம்மாளை எச்சரித்துள்ளார். ஆனால் தனது மகளின் பழக்கத்தைத் தடுக்க, மாரியம்மாள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே தொடர் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு, மாரியம்மாள் வீட்டை விட்டு வெளியேறி, தனது மகளின் வீட்டில் வசித்து வந்தார்.

இதையடுத்து அவர்களது உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் கணவருடன் வாழ வழி ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிறு அன்று, தனது வீட்டிற்கு மாரியம்மாள் வந்துள்ளார். அப்போது மீண்டும் சண்டை ஏற்பட்டது.

இந்நிலையில் திங்கள் இரவு, இருவரும் படுக்கைக்குச் சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை விரைவாக எழுந்த பெத்தண்ணன், கோபத்தால் தனது மனைவியின் கழுத்தை வெட்டி எறிந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், பெத்தண்ணனைக் கைது செய்தனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்