ஆப்நகரம்

ரூ.30,000 லஞ்சம் வாங்கிய தமிழக தீயணைப்புத் துறை அதிகாரி கைது!

தமிழக தீயணைப்புத் துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 26 Mar 2018, 10:49 pm
திருச்சி: தமிழக தீயணைப்புத் துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil Bribe Arrest
லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது


திருச்சி மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத் துறை அதிகாரி தமிழ்வாணன்(55). இவரிடம் ஜெயங்கொண்டம் அடுத்த காடாத்தூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சென்றுள்ளார்.

அப்போது தான் கட்டப் போகும் கல்யாண மண்டபத்திற்கு என்.ஓ.சி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு ரூ.30,000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் அளிக்க மனமில்லாத பாலகிருஷ்ணன், அரியலூரில் உள்ள ஊழல் கண்காணிப்பு மற்றும் எதிர்ப்பு இயக்ககத்தை அணுகியுள்ளார்.

அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, தமிழ்வாணனிடம் அளிக்குமாறு கூறியுள்ளனர்.

இந்நிலையில் கைகாட்டி கிராமம் அருகே தமிழ்வாணன் லஞ்சம் வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

TN fire station officer detained for taking bribe.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்