ஆப்நகரம்

மனைவி மீது சந்தேகம்; பக்கத்து வீட்டாருடன் நடந்த சண்டையில் உயிர்போன சோகம்!

மதுரை: மனைவி மீது சந்தேகமடைந்த சண்டையில் ஈடுபட்ட நபர் கொலை செய்யப்பட்டார்.

TIMESOFINDIA.COM 24 Jan 2019, 2:53 am
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ்(35). இவர் சரல்விலையில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி சுலோச்சனா(30). இவர் மீது ஜஸ்டினுக்கு அடிக்கடி சந்தேகம் எழுந்துள்ளது.
Samayam Tamil Chennai Dead


இதனால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு, கொட்டிகோடு காவல்நிலையத்தில் சுலோச்சனா புகார் அளித்துள்ளார். இதையடுத்து இருவரையும் அழைத்துப் பேசிய காவல்துறை, கவுன்சிலிங் செய்தனர்.

மனைவியை காயப்படுத்தக் கூடாது என்று எச்சரித்தனர். ஆனால் தனது மனைவி மீது தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று மாலை, தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் ரதிநாடா(65), அவரது மருமகன் ஜெபசிங்(34) ஆகியோரிடம் ஜஸ்டின் சண்டையிட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. கோபத்தில் ரதிநாடா மற்றும் ஜெபசிங் கத்தியால் ஜஸ்டினை தாக்கி தப்பிச் சென்றுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ரதிநாடா மற்றும் ஜெபசிங் மீது கொட்டிகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் இருவரும் போலீசில் சரண் அடைந்தனர். ஜஸ்டின், சுலோச்சனா தம்பதிக்கு 7 மற்றும் 5 வயதில் இரு மகன்கள் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி