செல்போனுக்காக 8ம் வகுப்பு மாணவனை கொன்ற சக மாணவர்கள்
வேலூரில் செல்போன் மோகத்தில் 8ம் வகுப்பு மாணவனை, சக மாணவர்களே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TNN 22 Dec 2017, 12:32 am
வேலூரில் செல்போன் மோகத்தில் 8ம் வகுப்பு மாணவனை, சக மாணவர்களே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகேயுள்ள வேப்பங்கல் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் – விஜி தம்பதியினரின் 13 வயது மகன் சந்தோஷ். இவன் அங்குள்ள பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், சந்தோஷ் படிக்கும் பள்ளியில், சக மாணவர்களிடம் இருந்து செல்போன் வாங்குவதற்காக லத்தேரி லப்பைகிருஷ்ணாபுரத்துக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, செல்போன் பேரம் பேசப்பட்டதில், இரு தரப்பு மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஆத்திரமடைந்த சகமாணவர்கள் சந்தோஷை கல்லால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
இது குறித்து தகவலறிந்த லத்தேரி போலீசார், அங்கு பிணமாக கிடந்த சந்தோஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சந்தோஷை கொலை செய்த மாணவர்களில் ஒருவரை பிடித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ம்றற மாணவர்களை தேடி வருகின்றனர்.
செல்போன் மோகத்தில், எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே கொலை செய்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகேயுள்ள வேப்பங்கல் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் – விஜி தம்பதியினரின் 13 வயது மகன் சந்தோஷ். இவன் அங்குள்ள பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், சந்தோஷ் படிக்கும் பள்ளியில், சக மாணவர்களிடம் இருந்து செல்போன் வாங்குவதற்காக லத்தேரி லப்பைகிருஷ்ணாபுரத்துக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, செல்போன் பேரம் பேசப்பட்டதில், இரு தரப்பு மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஆத்திரமடைந்த சகமாணவர்கள் சந்தோஷை கல்லால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
இது குறித்து தகவலறிந்த லத்தேரி போலீசார், அங்கு பிணமாக கிடந்த சந்தோஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சந்தோஷை கொலை செய்த மாணவர்களில் ஒருவரை பிடித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ம்றற மாணவர்களை தேடி வருகின்றனர்.
செல்போன் மோகத்தில், எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே கொலை செய்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.