ஆப்நகரம்

கணவரின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு விட்டு தப்பியோடிய பெண்

நெல்லையில், குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 12 Feb 2018, 5:45 pm
நெல்லையில், குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
Samayam Tamil tn woman kills husband by smashing his head with grinder stone
கணவரின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு விட்டு தப்பியோடிய பெண்


நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(47). இவருடைய மனைவி முத்துலெட்சுமி (37). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

ஆறுமுகத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், தினமும் குடித்துவிட்டு முத்துலெட்சுமியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று குடித்து விட்டு வந்த ஆறுமுகம் உணவு கேட்டுள்ளார். ஆனால், முத்துலெட்சுமி சைவ சாப்பாடு மட்டுமே சமைத்திருந்தார். இதனால், அசைவ உணவை கேட்டு ஆறுமுகம் தகராறு செய்ததாகவும், முத்துலெட்சுமியை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த முத்துலெட்சுமி அருகில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து ஆறுமுகத்தின் தலையில் போட்டுள்ளார். இதனால், ஆறுமுகம் தலையில் பலத்த அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இதனால், அதிர்ச்சிடையந்த முத்துலெட்சுமி அங்கிருந்து தப்பி ஓடினார்

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிவந்திப்பட்டி போலீசார், தலைமறைவான முத்துலெட்சுமியை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி