ஆப்நகரம்

இன்று குழந்தைகள் தினம்! குழந்தைகள் நலன் காப்போம்

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி, இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், குழந்தைகள் மீது நேரு அளவற்ற பாசம் வைத்திருந்தது தான்.

TNN 14 Nov 2017, 5:26 am
முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி, இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், குழந்தைகள் மீது நேரு அளவற்ற பாசம் வைத்திருந்தது தான்.
Samayam Tamil today childrens day
இன்று குழந்தைகள் தினம்! குழந்தைகள் நலன் காப்போம்


பொதுவாக பெரும்பாண்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியை அள்ளத் தருவதும், நமது சோகத்தை மறக்க வைத்து புன்னகையில் ஆழ்த்துவதிலும் குழந்தைகளுக்கு தான் பெரும் பங்கு உண்டு.

பள்ளிக்கூடங்களைப் பொறுத்த வரையில், குழந்தைகள் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் எந்த ஆசிரியராவாது திட்டவந்தாலோ, அடிக்க வந்தாலோ, சார்… இன்னைக்கு குழந்தைகள் தினம் என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்.

குழந்தைகளின் நலனுக்காக நமது நாட்டில் பல்வேறு விதமான திட்டங்கள் கொண்டு வந்த போதிலும், இன்றும் குழந்தை தொழிலாளர்களும், ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறப்பு விதமும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இது மட்டுமில்லாமல், பல தீய மனிதர்கள் குழந்தைகளை பிச்சை எடுக்க சொல்லி, வளர்ந்து வருகிறார்கள். இவையணைத்தும் அரசாங்கம் தான் கவனிக்க வேண்டும் என்று தான் மக்களும் இருக்கிறார்கள். சொல்லப்போனால் இது தனிமனித ஒழுக்கம், தனிமனித தேவை.

குழந்தைகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தினம் தான் குழந்தைகள் தினம். ஆனாலும், இந்த நல்ல தினத்தை சர்வ சாதாரண நாள் போன்று நாம் கடத்தி விடுகிறறோம்.

அப்படி இல்லாமல், தீபாவளி, புத்தாண்டு போல், குழந்தைகள் தினத்தையும் ஒரு பண்டிகை போல் மகிழ்வுடன் இருக்க வேண்டும்.

இன்றைய தினத்தில் நம்முடைய குழந்தைகளினால் நமக்கு கிடைத்த பாக்கியத்தை நினைந்து, நமது அன்பால் நன்றி செலுத்த வேண்டும்.

நமது குழந்தைகள் மட்டுமல்ல, அனைவரது குழந்தைகளையும் நம் பிள்ளை போன்றே எண்ணி, அவர்களது நலனை உணர வேண்டும்.

அடுத்த செய்தி