திருச்சி: தங்க பிஸ்கட் கடத்தியவருக்கு உதவிய குடியேற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்து சேர்ந்தது. அதில் சதிக்யு அலி என்பவர் வந்து இறங்கினார். அவர் தன்னுடைய சூட்கேஸில் 1.6 கிலோ எடை கொண்ட தங்க நகைகளைக் கொண்டு வந்துள்ளார். அதனை செல்போன் கவர் போன்று, பேக் செய்து எடுத்து வந்தார். அதனைச் சோதனை செய்த குடியேற்ற அதிகாரி பாலாஜி, தங்க பிஸ்கட்களை பார்த்து விட்டு மீண்டும் அவரிடமே கொடுத்துள்ளார். பின்னர் விமான நிலைய கட்டடத்தில் இருந்து வெளியே சென்ற அவர், சதிக்யூவை தனியாக சந்தித்துள்ளார்.
அப்போது அவர் சில தங்கக் கட்டிகளைப் பெற்றுக் கொண்டார். இதனை சிசிடிவி மூலம் சுங்கவரித் துறை அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரும் தங்கக் கட்டிகளை பத்திரப்படுத்திக் கொண்டிருந்த போது, போலீசார் வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
Trichy airport immigration official held for helping gold smuggler.
திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்து சேர்ந்தது. அதில் சதிக்யு அலி என்பவர் வந்து இறங்கினார். அவர் தன்னுடைய சூட்கேஸில் 1.6 கிலோ எடை கொண்ட தங்க நகைகளைக் கொண்டு வந்துள்ளார். அதனை செல்போன் கவர் போன்று, பேக் செய்து எடுத்து வந்தார். அதனைச் சோதனை செய்த குடியேற்ற அதிகாரி பாலாஜி, தங்க பிஸ்கட்களை பார்த்து விட்டு மீண்டும் அவரிடமே கொடுத்துள்ளார். பின்னர் விமான நிலைய கட்டடத்தில் இருந்து வெளியே சென்ற அவர், சதிக்யூவை தனியாக சந்தித்துள்ளார்.
அப்போது அவர் சில தங்கக் கட்டிகளைப் பெற்றுக் கொண்டார். இதனை சிசிடிவி மூலம் சுங்கவரித் துறை அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரும் தங்கக் கட்டிகளை பத்திரப்படுத்திக் கொண்டிருந்த போது, போலீசார் வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
Trichy airport immigration official held for helping gold smuggler.