ஆப்நகரம்

மைனர் பெண் படத்தை மார்பிங் செய்து வெளியீடு - திருச்சி இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை!

சிறுமியின் படத்தை மார்பிங் செய்து, சமூக வலைத்தளத்தை பதிவிட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2019, 9:46 pm
மைனர் பெண்ணை மிரட்டி, அவரது மார்பிங் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டிற்காக எஸ்.அஜித்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Arrest


அதுமட்டுமல்லாமல், ரூ.5,000 அபராதம் விதித்தது. இதனை செலுத்த தவறினால் 6 மாதங்கள் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூடர் ஆர்.வெங்கடேசன், அஜித்குமார் ஒரு கட்டுமான தொழிலாளர்.

இவர் 17 வயது சிறுமியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அச்சிறுமி அஜித் இல்லத்திற்கு அருகே வசித்து வருகிறார். ஆனால் சிறுமி மறுத்த போதிலும், தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி வாட்ஸ்-அப் புரொபைல் பிக்சராக வைத்த புகைப்படத்தை, அஜித் டவுன்லோடு செய்துள்ளார். அதனை மார்பிங் செய்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மலைக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி அஜித் கைது செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி