ஆப்நகரம்

பெரம்பூர்: குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

பெரம்பூரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 4 Mar 2018, 11:52 pm
பெரம்பூரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil two boys drown in pond near perambalur in tn
பெரம்பூர்: குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!


சென்னையை அடுத்துள்ள பெரம்பூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் சக்தி(12), மகராஜன் என்பவரது மகன் சந்தோஷ் (11). இவர்கள் இருவரும் ஒகலூர் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று விடுமுறை தினத்தன்று சக்தி, சந்தோஷ் மற்றும் அவர்களது நண்பர் சக்தி கலைசெல்வன் ஆகிய மூவரும் தங்களது பகுதியில் உள்ள குளத்துக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆழம் தெரியாமல் இருவரும் குளத்தின் மையப்பகுதிக்குச் செல்ல, குளத்தில் மூழ்கினர்.

சிறுவர்களின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு உள்ளூர்வாசிகள் விரைந்து வர, குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த சக்தி கலைசெல்வனை மீட்டனர். ஆனால், அதற்குள்ளாக சக்தி, சந்தோஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

அடுத்த செய்தி