ஆப்நகரம்

இளம் பெண்ணை விற்க முயன்ற இருவர் கைது

மும்பையைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை மணப்பெண் எனக் கூறி ரூ.80,000 விற்ற இருவரை வாத்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 24 Aug 2016, 1:54 pm
பலன்பூர்: மும்பையைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை மணப்பெண் எனக் கூறி ரூ.80,000 விற்ற இருவரை வாத்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil two held for trying to sell girl for rs 80000
இளம் பெண்ணை விற்க முயன்ற இருவர் கைது


தானே அருகே கல்யாண் பகுதியில் தாயுடன் வசித்து வந்த இளம் பெண்ணை, ராஜூ பிரஜாபதி என்பவர் கேத்தரின் சேவை நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து முதலில் அகமதாபாத் அழைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து காவல் கண்காணிப்பாளர் சைதன்யா மன்ட்லிக் கூறுகையில், சில நாட்கள் அகமதாபாத்தில் இருந்த இளம்பெண்ணை, பிரஜாபதியின் உதவியாளரான 45 வயது மதிக்கத்த ஒரு பெண் அம்பாஜி எனும் இடத்துக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அவர்களின் திட்டப்படி, பாதார்பூரைச் சேர்ந்த மோக்ஜி சௌத்ரி எனும் திருமண புரோக்கரை தொடர்புக் கொண்டனர். பின்னர் அப்பெண்ணை வாங்க விரும்பிய பாரத் சென்மா என்பவரை சௌத்ரி தொடர்புக் கொண்டு, சென்மாவின் மகனுக்கு இப்பெண்ணை மணமகளாக ரூ.80,000 விற்றுள்ளார் என கூறினார்.

இந்த சூழ்ச்சியை அறிந்த இளம்பெண், அப்பகுதியில் உள்ள தோழி ஒருவரின் உதவியுடன் வாத்நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் சென்மா மற்றும் சௌத்ரி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண்ணின் சமூக பாதுகாவலர் என போலியான சான்றிதழ் தயாரித்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இளம்பெண்ணை ஏமாற்றி விற்க முயன்றவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்கிறோம். இதில் தொடர்புடைய பிரஜாபதி மற்றும் அவரது உதவி பெண்ணை தேடி வருவதாக சைதன்யா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி