ஆப்நகரம்

பந்திற்காக கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள்: கரை ஒதுங்கிய உடல்களால் அதிர்ச்சி

காஞ்சிபுரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 24 Mar 2017, 4:09 pm
சென்னை: காஞ்சிபுரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil two kancheepuram polytechnic college students drown in sea another is missing
பந்திற்காக கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள்: கரை ஒதுங்கிய உடல்களால் அதிர்ச்சி


காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வெங்கடேசன்(20), ராம்கி(20), விஜயகுமார்(20), சரண்ராஜ்(20), பார்த்திபன்(20), நரேஷ்குமார்(20). அவர்கள் தங்களது வகுப்புகள் முடிந்த பின்னர் மகாபலிபுரம் சென்றுள்ளனர். அங்கு கடற்கரையில் மாணவர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாடி உள்ளனர். அப்போது பந்து கடலில் விழுந்தது. அதனை எடுக்க மாணவர் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார். அவர் நீரில் மூழ்கியதால், மற்ற மாணவர்கள் காப்பாற்ற கடலில் இறங்கினர்.

அப்போது மிகப்பெரிய அலை ஒன்று மூவரையும் உள்ளே இழுத்து சென்றது. இதைக் கண்ட கரையில் இருந்த மாணவர்கள் உதவிக்காக கூச்சலிட்டனர். அப்போது அங்கு வந்த மீனவர்கள் மாணவர்கள் தேடினர். ஆனால் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. உடனடியாக அருகிலுள்ள காவல்துறையிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் வெங்கடேசன், ராம்கி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விஜயகுமாரின் உடலை தேடி வருகின்றனர்.

Two Kancheepuram polytechnic college students drown in sea, another is missing.

அடுத்த செய்தி