ஆப்நகரம்

பல்கலைக்கழக வளாகத்தில் கட்டிப்புரண்டு சண்டைப் போட்ட பேராசிரியர்!!

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் இரு பேராசிரியர்கள் கட்டிப் புரண்டு அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 3 Mar 2018, 3:11 pm
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் இரு பேராசிரியர்கள் கட்டிப் புரண்டு அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil two periyar university professors come to blows on campus land in hospital
பல்கலைக்கழக வளாகத்தில் கட்டிப்புரண்டு சண்டைப் போட்ட பேராசிரியர்!!


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அன்பரசன் (52). அதே துறையில் தலைவராக இருக்கும் குமாரதாஸுக்கும், அன்பரசனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பணிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், சீனியர் முறைப்படி பேராசிரியராக இருக்கும் அன்பரசனை துறையின் தலைவராகாததால் இந்த முன்விரோதம் மேலும் அதிகரித்தது.

இப்படி இருக்கையில், அன்பரசன் பதிவேட்டில் சீனியாரிட்டியைக் குறிப்பிட்டு கையெழுத்திட்டு வந்துள்ளார். அதற்கு குமாரதாஸ், அதுபோல சீனியாரிட்டியைக் குறிப்பிட்டு கையெழுத்திடக் கூடாது என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக துறை தலைவர் அலுவலகத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட இந்த பரபரப்பான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதன்பின் இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி