ஆப்நகரம்

சென்னையில் பைக் திருடிய பள்ளி மாணவர்கள் இருவர் கைது

சென்னை புழல் பகுதியில் பைக்களை திருடிய இரண்டு பள்ளி மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

TOI Contributor 2 Nov 2016, 8:16 pm
சென்னை : புழல் பகுதியில் பைக்களை திருடிய இரண்டு பள்ளி மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil two school students held for stealing motorcycles
சென்னையில் பைக் திருடிய பள்ளி மாணவர்கள் இருவர் கைது


திங்கள்கிழமையன்று புழல் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இரு மாணவர்கள் அந்த வழியாக வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், லைசென் மற்றும் வாகன ஆவணங்கள் குறித்து அவர்களிடம் கேட்டனர்.

அப்போது அந்த மாணவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனைத்தொடர்ந்து போலீசார் மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் அந்த மணவர்கள் தங்களது வீடருகில் நிறுத்திவைத்த வெறொரு திருட்டு பைக்கையும் கைப்பற்றினார்கள்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இருவரும் புழல், கொடுங்கையூரிலுள்ள அரசு பள்ளியில் பத்து மற்றும் பதினொராம் வகுப்பு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களை கைது செய்த போலீசார் சிறார் நீதிமன்ற குழுவின் முன் அவர்களை ஆஜர்படுத்தினார்கள்.

அடுத்த செய்தி