ஆப்நகரம்

தண்டவாளத்தில் கிடந்த 2 பள்ளி மாணவிகளின் உடல்; கதறிய பெற்றோர்கள்...!

ரயில் தண்டவாளத்தில் கிடந்த 10ஆம் வகுப்பு மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 3 Aug 2017, 9:21 pm
திருச்சி: ரயில் தண்டவாளத்தில் கிடந்த 10ஆம் வகுப்பு மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil two schoolgirls found dead on railway tracks in tamil nadu
தண்டவாளத்தில் கிடந்த 2 பள்ளி மாணவிகளின் உடல்; கதறிய பெற்றோர்கள்...!


திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் செல்வி(15), ரதிதேவி(15). இவர்கள் வையம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று காலை பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆனால் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் ஏராளமான இடங்களில் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று காலை தட்டராம்பட்டி கிராமம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் மாணவிகள் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாணவிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் திருச்சி - திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Two schoolgirls found dead on railway tracks in Tamil Nadu.

அடுத்த செய்தி