ஆப்நகரம்

மும்பையில் பணத்திற்காக இரு மருமகள்களை வரதட்சணை செய்த கொடுமை

மும்பை : ராஜஸ்தானை சேர்ந்த இரு சகோதரிகளை திருமணம் செய்த மும்பையை சேர்ந்த குடும்பத்தினர் 5 லட்சம் பணத்திற்காக விற்பனை செய்துள்ளனர்.

Samayam Tamil 23 Oct 2018, 10:46 pm
மும்பை : ராஜஸ்தானை சேர்ந்த இரு சகோதரிகளை திருமணம் செய்த மும்பையை சேர்ந்த குடும்பத்தினர் 5 லட்சம் பணத்திற்காக விற்பனை செய்துள்ளனர்.
Samayam Tamil dowry


ராஜஸ்தானை சேர்ந்த நிர்மலா, சர்மிளா ஆகிய இரு சகோதரிகளை, மும்பையை சேர்ந்த சகோதரர்களான சஞ்சய் ராவல் மற்றும் வருண் ராவல் கடந்த 2015ல் திருமணம் செய்தானர்.
திருமணம் செய்த முதல் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர். 9 லட்சம் கேட்டு சகோதரிகளை அடித்து சித்தரவதை செய்யப்பட்டு பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பப்பட்ட அந்த சகோதரிகள் ரூ. 5 லட்சம் பணத்தை திரட்டி கொடுத்துள்ளனர்.

ஆனால் பணம் பெற்றுக் கொண்ட பின் அந்த சித்தரவதை அதிகமானது. இன்னும் 5 லட்சம் பணம் வேண்டும் என அடித்து துன்புறுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களிடன் பணம் இல்லை என கூறினர்.

இதையடுத்து ராஜஸ்தானில் உள்ள பிந்த்வாரே நகருக்கு அந்த இரு சகோதரிகளையும் அழைத்து சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.

10 நாட்களுக்கு பிறகு அப்பெண்கள் இருவரையும் மும்பையை சேர்ந்த அறிமுகம் இல்லாத ஒருவருடன் அனுப்பி வைத்தனர். ஏன் எங்களை அழைத்து செல்கிறீர்கள் என கேட்டதற்கு, உங்களை என்னிடத்தில் ரூ.1.50 லட்சத்திற்கு அவர்கள் விற்பனை செய்துவிட்டனர். அந்த தொகை வசூல் ஆகும் வரை உங்களை விட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் அவரிடமிருந்து தப்பித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து அப்பெண்களின் கணவன்கள், மாமனார் மோகன்லால், மாமியார் லீலாதேவி, உறவினர்கள் 12 மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்