ஆப்நகரம்

பச்சை மிளகாய் சாப்பிட்ட 2 வயது குழந்தை பலி

தில்லியில் பச்சை மிளகாய் சாப்பிட்ட குழந்தை காரம் தாங்காமல் மூச்சு விட முடியாமல் இறந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

TOI Contributor 14 Mar 2016, 4:50 pm
தில்லியில் பச்சை மிளகாய் சாப்பிட்ட குழந்தை காரம் தாங்காமல் மூச்சு விட முடியாமல் இறந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Samayam Tamil two year old girl dies after biting a chilli
பச்சை மிளகாய் சாப்பிட்ட 2 வயது குழந்தை பலி


இந்த சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது என்றாலும் தற்போது இந்த தகவல் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி பெற்றோருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

தில்லியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை தெரியாமல் பச்சை மிளகாயை கடித்துவிட்டது. காரம் தாங்க முடியாமல் அழுது பலமுறை வாந்தி எடுத்துள்ளது. இதனால், இரப்பை நீர் மூச்சுக் குழாய்க்குள் சென்றது. உடனடியாக் இந்தக் குழந்தை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

ஆரம்ப சிகிச்சையில் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினாலும், இறுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது.

இதுகுறித்து அந்தக் குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் டாக்டர் சித்தரஞ்ச்சன் பஹேரா கூறுகையில், ''இது மிகவும் வினோதமான கேஸ் ஆக இருந்தது. மூச்சுக் குழாய்க்குள் இரப்பை நீர் சென்றதால் அந்தக் குழந்தையின் இறப்புக்கு காரணமாக இருந்தது'' என்றார்.

எதை சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என்று குழந்தைகளுக்கு தெரியாது. பெற்றோர்கள்தான் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி