ஆப்நகரம்

அரசுப் பள்ளிக்கு வெளிச்சம் கொடுத்த அமெரிக்க மாணவன்!

2Kw சூரிய மின்தகடு எரிசக்தியை அரசுப்பள்ளிக்கு தானம் செய்தார்.

Samayam Tamil 17 Dec 2018, 10:10 am
அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு தமிழ்நாடு வந்துள்ள 16 வயது மாணவன், தனது சொந்த பணத்தில் சேலம் அரசுப் பள்ளிக்கு சூரிய மின்தகடு பொருத்தி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 67121794


அமெரிக்காவில் உள்ள டென்வர் நகர் பள்ளியில் படித்து வரும் 16 வயது மாணவன் ஹிர்த்திக் ரமேஷ். இவரது பூர்வீகம் சேலம் மாவட்டமாகும். தற்போது பள்ளிபடிப்பு முடிந்துள்ள நிலையில், விடுமுறைக்காக தமிழ்நாடு வந்துள்ளார். விடுமுறையில் சேலத்தை சுற்றிப் பார்த்த அவர், தனது தாத்தா படித்த ஆத்தூர் அருகே உள்ள தேவியாக்குறிச்சி அரசுப்பள்ளிக்கு சென்றார்.

அப்போது அடிப்படை வசதி கூட இல்லாத அரசுப்பள்ளியின் நிலையைக் கண்டு ஹரித்திக் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் பேசிய போது, இந்த பள்ளி மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல அரசுப் பள்ளிகளின் நிலை மோசமாக தான் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த ஹிரித்திக் ரமேஷ், அரசுப்பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

இதையடுத்து பள்ளிக்கு முதற்கட்ட தேவையாக என்ன வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரிடம் ஹரித்திக் கேட்டார். அந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பள்ளிக்கு வரும் மின்சாரமும் தடைபடுவதாக தலைமையாசிரியர் கூறியுள்ளார்.

பின்னர், பெற்றோருடன் கலந்தாலோசித்த ஹரித்திக், Empowering Rural India Foundation என்ற தொண்டு நிறுவன அறக்கட்டளையை தொடங்கினார். தொண்டு நிறுவனம் தொடங்கினால் மட்டும் போதாது, அதற்குப் பணம் வேண்டும். நிதி திரட்ட வேண்டும் என்று ஹரித்திக்கின் பெற்றோர்கள் கூறியுள்ளார். இதனையடுத்து 6,000 டாலர் (இந்திய மதிப்பில் 4,30,770 ரூபாய்) தானம் செய்தார். இதில் இரண்டு லட்சம் ரூபாய் அவர் கலந்து கொண்ட அறிவியல் போட்டியில் பரிசு பெற்றதாகும். மீதம் உள்ள ரூபாய் அவருடைய சொந்த பணமாகும்.

தொடர்ந்து முழுவீச்சில் களம் இறங்கிய ஹிரித்திக் 2Kw சூரிய மின்தகடு எரிசக்தியை அரசுப்பள்ளிக்கு தானம் செய்தார். இதன் மூலம் அரசுப்பள்ளிக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதாகவும், தற்போது அளவுக்கு அதிகமாகவே மின்சாரம் கிடைப்பதாகவும் ஹரித்திக் கூறுகிறார். பள்ளி தேவை போக மீதம் உள்ள மின்சாரம் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி