ஆப்நகரம்

பொம்மை துப்பாக்கி என்று நினைத்த சிறுமி! அடுத்து நடந்த பரிதாபம்!!

உத்தரப்பிரதசேத்தில் விளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து கேட்ட சிறுமியை, வாலிபர் ஒருவர் உண்மையான துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Jan 2019, 5:48 pm
உத்தரப்பிரதசேத்தில் விளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து கேட்ட சிறுமியை, வாலிபர் ஒருவர் உண்மையான துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil gun


உத்தரப்பிரதேச மாநிலம் சாம்பால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அஜய் பால் மெளரியா. இவருக்கு 10 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மெளரியாவும் அவரது மனைவியும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மெளரியாவின் மகளும், மகனும் சற்று தொலைவில் நின்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அவ்வழியாக வித்யா ராம் என்ற வாலிபர் ஒருவர் துப்பாக்கியோடு சுற்றித் திரிந்துள்ளார். அவரை பார்த்த சிறுமி, அந்த துப்பாக்கி உண்மையானதா, பொம்மையா என்று கேட்டுள்ளார். இதையடுத்து உண்மையா பொய்யா என்பதை சுட்டு காட்டுகிறேன் என்ற வாலிபர், சிறுமியை துப்பாக்கியால் சுட்டார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் தந்தை மெளரியா, பலத்த காயங்களுடன் சிறுமி கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கிருந்து சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமிக்கு கை மற்றும் வயிற்றுப் பகுதியில் தோட்டா பாய்ந்து படுகாயத்துடன் உள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வித்யா ராமை கைது செய்தனர். அவர் யார், துப்பாக்கி எப்படி அவரிடம் வந்தது என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்